
செய்திகள் இந்தியா
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
புது டெல்லி:
வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவரை உறுப்பினர்களாக சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான தனது அறிக்கையை ஜேபிசி முறைப்படி ஏற்றுக்கொண்டது. மசோதாவின் திருத்தப்பட்ட வடிவத்தை 15-11 வாக்குகள் அடிப்படையில் ஜெகதாம்பிகா பால் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், பல்வேறு திருத்தங்களை குழு ஏற்றுக்கொண்டுள்ளது. பாஸ்மந்தா முஸ்லிம்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நபர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் புதிதாக வக்பு பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஜேபிசி செயல்பாடு குறித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா வடிவானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
முஸ்லிம் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதன் மூலம் வக்பு வாரியம் வலிமை இழக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am