
செய்திகள் இந்தியா
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
புது டெல்லி:
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததற்கு உத்தர பிரதேச அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மவுனி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் உ.பி. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
விஐபிகளுக்கு தனி பாஸ்கள் வழங்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சாதாரண மக்கள் கூட்டமாக தவிக்கவிடப்பட்டனர் என்றார்.
சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மகா கும்பமேளாவில் உலகதரம் வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு கூறியது பொய் என நிரூபணமாகி உள்ளது.
நிர்வாக குளறுபடிகளின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மகா கும்பமேளாவில் அரைகுறையான ஏற்பாடுகள், விஐபி-க்களுக்கு அதிக முக்கியத்துவம். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது கண்டிக்கத்தக்கது” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am