
செய்திகள் இந்தியா
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
ஹைதராபாத்:
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிக்கெட் விலை தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் வழக்கு தொடுத்தார்.
அதில், இரவு 1.30 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதைக் காண செல்லும் சிறுவர்களின் உடல்நிலையிலும், மனநிலையிலும் எதிர்மறைவு விளைவுகள் ஏற்படுத்துகின்றன என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், திரையரங்குகள், மல்ட்டி பிளெக்ஸ்களில் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வருவதை ஒழுங்குபடுத்துவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து, அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
அதுவரை இரவு 11 மணிக்குப் பிறகு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்தை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தி்ல் உயிரிழந்த தாயுடன் இருந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm