
செய்திகள் இந்தியா
வக்பு மசோதா: ஆளும் கட்சிகளின் திருத்தங்கள் ஏற்பு, எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு
புதுடெல்லி:
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு
எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரித்து, ஆளும் கட்சிகளின் திருத்தங்கள் ஏற்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் 14 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் திமுக உறுப்பினர்கள் ஆ.ராசா, எம்.எம். அப்துல்லா, மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 35 -க்கும் மேற்பட்ட முறை கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்தியது.
இதில் பலமுறை எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் ஏற்பட்டதாக இக்கூட்டத்துக்கு பின்னர் ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வக்பு சட்டத்தில் மொத்தம் 44 திருத்தங்களை செய்ய புதிய மசோதா வகை செய்கிறது. இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த 44 திருத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இவை அனைத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வாக்கெடுப்பில் இந்த கோரிக்கை தோல்வி அடைந்தது. இதுபோல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 14 திருத்தங்களில் மட்டும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
எனவே இந்த 14 திருத்தங்கள் மட்டுமே பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த வரைவு மசோதா 28-ம் தேதி வெளியிடப்பட்டு 29-ம் தேதி 14 திருத்தங்களை ஏற்பதை உறுதி செய்ய வாக்கெடுப்பு நடைபெறும். 31-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am