செய்திகள் மலேசியா
கோவிட்-19 பரவல் காரணமாக அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை மலாக்காவில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை: கைரி ஜமாலுத்தீன்
பெடலிங் ஜெயா:
மலாக்காவில் தேர்தல் நாள் நெருங்கி வருவதால் கோவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக மாநிலத்தில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை அரசியல் கூட்டங்களுக்கு சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
மாநிலத் தேர்தலுக்கான நிலையான நடமாட்ட க் கட்டுப்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) இருக்கும் போது, இது நவம்பர் 8 முதல் துவங்கும் பிரச்சார காலத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும். இருப்பினும் அதற்கு முன்பு ஏராளமானோர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் மக்கள் கூட்டத்தை சந்திப்பதிலும் இருக்கும் ஆபத்தை அமைச்சகம் கவலை கவலையோடு பார்க்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
“மலாக்கா தேசிய மீட்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தில் இருப்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி SOPகளைப் பின்பற்றி அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
"இருப்பினும், கூட்டம் கூடும்போது அரசியல் கட்சிகள் (என்னுடையது உட்பட) SOP களை கவனிக்க முடியாது.
"பொது சுகாதார நலன் கருதி, இனிமேல் அனைத்து அரசியல் கூட்டங்களும் மலாக்காவில் அனுமதிக்கப்படாது" என்று கைரி ஜமாலுதீன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm