நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

செலாயாங்: 

பத்துமலையில் மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ஜனவரி 25ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தின் துர்கை ஆலயத்திற்குப் பின்னால் வெகு விமரிசையாக நடைபெற்றது 

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா, புவான்ஶ்ரீ மல்லிகா நடராஜா, அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார், ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் 

அடிக்கல் நாட்டு பூஜையை தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் பத்தர் & பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ரவி குருக்கள் ஆகியோர் வழிநடத்தினர். 

அடிக்கல் நாட்டு பூஜை காலை மணி 11.30 க்குத் தொடங்கிய வேளையில் மதியம் 12.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset