செய்திகள் மலேசியா
கோத்தா திங்கியில் 33 பேருக்கு காசநோய் தொற்று உறுதி: 804 பேருக்கு பரிசோதனை
கோலாலம்பூர்:
கோத்தா திங்கியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி காசநோய் பரவல் இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் இதனை கூறினார்.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நிலவரப்படி 804 நெருங்கிய தொடர்புகளில் இருந்து மொத்தம் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சின் குழு தற்போது களத்தில் உள்ளது. தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாசிட்டிவ் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சால் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக இந்த கிளஸ்டரில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. ஆனால் அது காசநோய் தொற்று காரணமாக இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 12:31 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள புதிய நடைமுறையை மைக்கி வரவேற்கிறது
February 5, 2026, 11:58 am
சட்டவிரோத வழிபாட்டுத் தள எதிர்ப்பு பேரணியைத் தடுக்க ஐஜிபி தலையிட வேண்டும்: எம்ஐபிபி
February 5, 2026, 10:45 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பாதுகாப்பு நிறுவன லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்
February 5, 2026, 10:28 am
பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து, இரண்டு லோரிகள் உட்படுத்திய விபத்தில் 31 பேர் பாதிப்பு
February 5, 2026, 7:17 am
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கோலாலம்பூர் இலங்கைத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
February 4, 2026, 7:36 pm
