நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத வழிபாட்டுத் தள எதிர்ப்பு பேரணியைத் தடுக்க ஐஜிபி தலையிட வேண்டும்: எம்ஐபிபி

கோலாலம்பூர்:

சட்டவிரோத வழிபாட்டுத் தள எதிர்ப்பு பேரணியைத் தடுக்க தேசிய போலிஸ்படைத் தலைவர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்.

மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) கட்சி இதனை வலியுறுத்தியது.

வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறும் இந்த பேரணியைத் தடுக்க போலிஸ் அதிகாரிகள் தலையிட வேண்டும்.

இது குறித்து தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ காலித் இஸ்மாயிலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள சோகோ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே நடைபெறும் பேரணி குறித்து பேரணி ஏற்பாட்டாளர்கள் டாங் வாங்கி போலிஸ்க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, எம்ஐபிபி கட்சியின் தலைவர் பி. புனிதன் நேற்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக அக்கட்சியின் இளைஞர் தலைவர் ஜஸ்டின் பிரபாகரன் தெரிவித்தார்.

கூடுதலாக, தேசியக் கூட்டணி பங்காளி கட்சிகளான பாஸ், பெர்சத்துவுக்கு, கட்சித் தலைவர்கள் அப்துல் ஹாடி அவாங் , மொஹைதின் யாசின் மூலம் புனிதன் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியதாக ஜஸ்டின் கூறினார்.

எம்ஐபிபி அவர்களின் உறுப்பினர்கள், தலைவர்களை (பிஏஎஸ் மற்றும் பெர்சத்து) பேரணியில் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset