நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பாதுகாப்பு நிறுவன லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்

உலு சிலாங்கூர்:

பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பாதுகாப்பு நிறுவன லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

சிலாங்கூர் தீயணைப்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

ரவாங் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) கிலோமீட்டர் 433 இல் இன்று அதிகாலை ஒரு விரைவுப் பேருந்தும் இரண்டு லோரிகளும் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் ஒரு லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 10 டன் லோரியின் ஓட்டுநர் ஆவார்.

அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset