
செய்திகள் இந்தியா
ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்படுகிறது: ஃபரூக் அப்துல்லா
ஜம்மு:
இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ள நிலையில், அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்பட்டு வருகிறது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
ஜம்முவில் பேசிய அவர், இந்தியாவுக்கு அஞ்சுறுத்தல் என்பது நாட்டுக்குள்தான் இருக்கிறதே தவிர, நாட்டுக்கு வெளியே இல்லை. நாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள்தான் நாட்டை அழித்து வருகின்றனர். ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது.
இந்த வதந்தியை உடைக்கும் கடமை நம் அனைவருக்கு உண்டு. இந்தியாவில் 80 சதவீதம் ஹிந்துக்கள் உள்ள நிலையில் என்ன அச்சுறுத்தல் உள்ளது?
சிறப்பு அந்தஸ்து சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் ஜம்முவில் உள்ளூர் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தவர்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் வெளிமாநிலத்தவர் அங்கு வர தயங்குகிறார்கள். உங்கள் நிலம் பறிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2025, 12:25 pm
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு
March 28, 2025, 2:42 pm
ரமலான் ஈத் பண்டிகை அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை: ஏஎஸ்பி அறிவிப்பு
March 21, 2025, 12:06 pm
சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm