செய்திகள் ASEAN Malaysia 2025
சிங்கப்பூர் - ஆசியான் - சீனா: மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு: ஜோசஃபின் தியோ
பேங்காக்:
சிங்கப்பூர், ஆசியானோடும் சீனா போன்ற பங்காளி நாடுகளோடும் இணைந்து மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றங்களைத் தடுக்க அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகள் மோசடிகளை எதிர்க்கும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) சொன்னதாகக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருமதி தியோவின் கருத்துகள் வந்துள்ளன.
குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு நாடும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்; மோசடிகளை எதிர்க்கும் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
பேங்காக்கில் நடைபெற்ற ஐந்தாவது ஆசியான் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்கள் சந்திப்பில் சிங்கப்பூர் அமைச்சர் தியோ பேசினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
