
செய்திகள் ASEAN Malaysia 2025
இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆசியான் நிலையான இலக்கவியல், இணையப் பாதுகாப்பு தரநிலைகளை அமைக்க வேண்டும்: கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர்:
நம்பகமான இலக்கவியல் சூழலை வளர்ப்பதற்கும் பிராந்தியத்தின் உலகளாவிய இலக்கவியல் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும் ஆசியான் நிலையான இலக்கவியல் மற்றும் இணையப் பாதுகாப்பு தரநிலைகளை நிறுவ வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இத்தகைய முயற்சிகள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இயங்குநிலையை மேம்படுத்தும் என்றும், உலகளாவிய இலக்கவியல் நிலப்பரப்பில் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை வளர்ப்பதம் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலக்கவியல் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் (DEFA) குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிவு செய்வதற்கான அழைப்பை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது.
இது பிராந்தியத்திற்கு கணிசமான பொருளாதார நன்மைகளை வழங்கும் என்று அவர் வெள்ளிக்கிழமை பாங்காக்கில் நடந்த 5-ஆவது ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டத்தின் (ADGMIN) முடிவில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
2030-ஆம் ஆண்டுக்குள் ஆசியானின் இலக்கவியல் பொருளாதாரத்தின் மதிப்பை DEFA இரட்டிப்பாக்கி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது திட்டமிடப்பட்ட 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து அதிகரிக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
வெள்ளிக்கிழமை முடிவடைந்த ADGMIN-க்கு மலேசிய தூதுக்குழுவை வழிநடத்திய கோபிந்த், DEFA தவிர, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதில் வலுவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், மேம்பட்ட இணைப்பையும் இந்தக் கூட்டம் கோடிட்டுக் காட்டியது என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 26, 2025, 11:13 am