செய்திகள் மலேசியா
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
ஈப்போ:
பேராக்கில் கால்பந்து விளையாட்டுத்துறையில் பிரசித்தி பெற்ற கிந்தா இந்தியர் சங்கம் (கே.ஐ.ஏ) தங்களின் வருடாந்திர நிகழ்வான பொங்கல் விழாவை இம்மாதம் 26.1.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 8.00 க்கு நடத்தவுள்ளது என்று சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா கூறினார்.
இந்நிகழ்வு கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம் முறை இவ்வட்டாரத்திலுள்ள 5 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்கள் முதலில் பொங்கல் வைத்தல் போட்டி, கோலப்போட்டி, தமிழர் பாரம்பரிய பண்பாட்டு நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு தமிழர் கலை பண்பாட்டு அம்சங்களுடன் நடைபெற பாடகர்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு இசைகளும் இடம்பெறும். நிறைவுவிழாவில் வருகையாளர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூக பிரமுகர்கள், கிந்தா இந்தியர் சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ள அன்போடு கிந்தா இந்தியர் சங்க குடும்பத்தினர் அழைப்பதாக டத்தோ தங்காஜா கூறினார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல: ஹன்னா
December 22, 2025, 10:37 am
டத்தோஸ்ரீ நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை
December 22, 2025, 10:31 am
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 22, 2025, 9:27 am
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக ஒன்றுக் கூடிய ஆதரவாளர்கள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
