செய்திகள் மலேசியா
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக ஒன்றுக் கூடிய ஆதரவாளர்கள்
கோலாலம்பூர்:
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுக் கூடினர்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான விண்ணப்பத்தின் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் நஜிப் ரசாக்கின் நூற்றுக்கணக்கான தீவிர ஆதரவாளர்கள் இன்று காலை 7 மணி முதலே கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.
நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சூழல் ஒற்றுமையின் அடையாளமாக, நஜிப்பிற்கு நீதி, போஸ்கூவை விடுதலை செய், எப்போதும் போராடுவோம் போன்ற ஆதரவு முழக்கங்களால் நிரம்பியிருந்தது.
தீபகற்பத்தின் வடக்குப் பகுதி உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்பது அறியப்படுகிறது.
அதே நேரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் காலை 8.40 மணியளவில் காஜாங் சிறையிலிருந்து வந்தார்.
மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அரசாங்கத்தையும் மற்ற ஆறு தரப்பினரையும் பதிலளிக்கவும், கடந்த ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பிற்சேர்க்கை இருப்பதை உறுதிப்படுத்தவும் கட்டாயப்படுத்தும் வகையில் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரிய நஜிப்பின் மேல்முறையீட்டை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 10:37 am
டத்தோஸ்ரீ நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை
December 22, 2025, 10:31 am
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
