
செய்திகள் ASEAN Malaysia 2025
லங்காவியில் கலந்து கொள்ளும் ஆசியான் பேராளர்களுக்கு கிரிஸ்டலில் செய்யப்பட்ட கழுகு நினைவுபரிசாக வழங்கப்படவுள்ளது
லங்காவி:
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டினை மலேசியா உபசரணை நாடாக ஏற்று நடத்து நடத்துகிறது
அவ்வகையில், ஆசியான் தொடர்பான முக்கிய கூட்டங்களும் சந்திப்புகளும் என அனைத்தும் மலேசியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது
இந்நிலையில், லங்காவியில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முதல் கூட்டமாகும்.
லங்காவியில் கலந்து கொள்ளும் ஆசியான் பேராளர்களுக்கு கிரிஸ்டியலில் செய்யப்பட்ட கழுகு ஒன்று நினைவுப்பரிசாக வழங்கப்படும்
கிரிஸ்டல் கழுகைத் தொடர்ந்து பத்தெக் நினைவுப்பரிசும் வழங்கப்படும்.
இந்த கிரிஸ்டல் கழுகு வடிவமானது லங்காவியின் ஐகோனாக அமையும் என்று அதன் வடிவமைப்பாளர்கள் செய்தியாளர்கள் தெரிவித்தனர்
மேலும், பத்தெக் ஆடை வடிவமைப்பும் மலேசியாவின் பத்தெக் ஆடை விளம்பரத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கையாகவும் ஆசியான் கூட்டத்தில் மலேசியாவின் பண்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2025, 11:13 am