
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் உறவுகளை வலுப்படுத்துவதை மலேசியா இலக்கு கொண்டுள்ளது: கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் உறவுகளை வலுப்படுத்துவதை மலேசியா இலக்காக கொண்டுள்ளது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.
ஐந்தாவது ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தின் போது முக்கிய விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், எல்லை தாண்டிய தனியுரிமை கட்டமைப்புகள், சைபர் பாதுகாப்பு, இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஆசியானின் இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறவு உந்துதல் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும் அடித்தளம் அமைப்பதற்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது.
இந்த ஆண்டு மலேசியா ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்ற போது இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm
வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் ஹனோய் சென்றடைந்தார்
February 20, 2025, 1:31 pm
ஆசியான் - அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்த மலேசியா விரும்புகிறது: முஹம்மத் ஹசான்
February 12, 2025, 12:03 pm
மியான்மார் நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் உதவ வேண்டும்: முஹம்மத் ஹசான்
January 27, 2025, 4:47 pm
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் எரிசக்தி துறை கூட்டத்தில் 8 வருடாந்திர முன்னுரிமைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன
January 22, 2025, 11:31 am
மலேசியாவுக்கு அணுசக்திக்கான அவசரத் தேவை இல்லை: பிரதமர்
January 22, 2025, 11:13 am