செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குடிபோதையில் ரயில் அல்லது பேருந்தில் ஏற அனுமதி இல்லை; மீறினால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்: போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் குடிபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்யும் நிலையில் இல்லாதவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
குடிபோதையில் மற்ற பயணிகளுக்குத் தொல்லை விளைவிப்போர் உடனடியாகப் பேருந்து அல்லது ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.
ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் (Chee Hong Tat) நினைவுறுத்தினார்.
போக்குவரத்து நிறுவனங்கள் அவர்களுக்குக் குற்ற அறிக்கை விடுத்து அபராதமும் விதிக்கலாம் என்றார் அவர்.
கடந்த 3 ஆண்டுகளில், மாதத்துக்குச் சராசரியாக அதுபோன்ற சுமார் 34 சம்பவங்கள் நடந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களில் பலர் ஒத்துழைப்பு வழங்கியதால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடிபோதை அறிகுறிகளைக் கண்டறியவும் குடிபோதையில் உள்ளவர்களைக் கையாளவும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையிலிருந்த பயணிகள் எத்தனை பேர்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உறுப்பினர் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சீ எழுத்துபூர்வ பதில் தந்தார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 11:33 am
சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
September 19, 2026, 11:17 am
கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த்அ அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
September 16, 2026, 10:43 pm
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:22 pm
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
