செய்திகள் மலேசியா
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறையின் துணையமைச்சராக பொறுப்பேற்றது முதல் சமுதாயத்திற்காக 7 திட்டங்களை அறிவித்தேன்.
இத்திட்டங்கள் அனைத்தும் இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தொழில் முனைவர்களுக்கு பெரும் பயனாக இருந்தது.
இந்த 2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்திற்கான இத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கண்டிப்பாக இத்திட்டங்கள் அனைத்தும் தொடரும். கடந்தாண்டு 7 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
இவ்வாண்டும் கிட்டத்தட்ட 10 திட்டங்கள் அமல்படுத்தப்படலாம். திட்டங்கள் அறிவிப்பதுடன் நிதி ஒதுக்குவது முக்கியம் அல்ல.
அத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். அது தான் எங்களின் இலக்கு.
ஆகையால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் முறையாக அமல்படுத்தப்படும்.
சுங்கைபூலோவில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.
இந்த பொங்கல் விழாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
கெப்போங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது
December 9, 2025, 4:23 pm
