செய்திகள் மலேசியா
மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக இன்று இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், நடிகர் பிரசாந்த், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர் ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் இப் போட்டி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 1:25 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm