
செய்திகள் மலேசியா
மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக இன்று இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், நடிகர் பிரசாந்த், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர் ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் இப் போட்டி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 1:41 pm
சபா அம்னோவில் பிரிவினைகள் இல்லை: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
May 17, 2025, 11:39 pm
ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல்
May 17, 2025, 11:21 pm
பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவாக் மாநில பணியாற்ற தயாராக உள்ளது: அபாங் ஜோ தகவல்
May 17, 2025, 6:31 pm
ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2025, 6:19 pm