நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானில் நுழையவில்லை: இந்தியா மறுப்பு

புது டெல்லி:

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந் நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறுகையில், "பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரை அந் நாட்டின் கடல் எல்லையாக உள்ளது.

ஆனால், இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் இருந்தது. எனவே, பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றச்சாட்டில் உண்மையில்லை'' என்று தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset