
செய்திகள் இந்தியா
தில்லி பேரவைத் தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்
புது டெல்லி:
வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் காஙக்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகியவை ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் காண்கின்றன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் சேர்ந்த போட்டியிட்ட ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாஜக. காங்கிரஸ் கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்தநிலையில், சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்று ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆட்சி செய்தது.
ஆனால், கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
பாஜகவும் கடந்த 26 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் அமரவில்லை. இதனால் நடப்பு தேர்தல் ஆட்சியை தக்க வைப்பதில் ஆம் ஆத்மியும், பலத்தை நிரூபிக்க காங்கிரஸும், வரலாற்றில் இடம்பெற பாஜகவும் திட்டங்களை வகுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm