
செய்திகள் இந்தியா
ஃபேஸ்புக் காதலால் பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்
புது டெல்லி:
ஃபேஸ்புக்கில் பழகிய பெண்ணை திருமணம் செய்ய பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய உத்தர பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த பாதல் பாபு என்ற இளைஞர் அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் வழியாக எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் மௌங் கிராமத்தில் வசித்து வந்த சனா ராணி வீட்டிற்கு பாபு கடந்த டிசம்பர் 28ம் தேதி வந்தபோது கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், சனா அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டரை வருடங்களாக பாபுவுடன் ஃபேஸ்புக்கில் நண்பராகப் பழகி வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாபு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் உள்ள தனது மகனை பிரதமர் மோடி தலையிட்டு மீட்க வேண்டும் என்று பாபுவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm