
செய்திகள் வணிகம்
ரோன் 97, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 சென் உயர்ந்தது
புத்ராஜெயா:
ரோன் 97, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 சென் உயர்கிறது.
நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை அறிவித்தது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரோன் 97 இன் விலை லிட்டருக்கு 3.25 ரிங்கிட்டில் இருந்து 3.28 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 2.95 ரிங்கிட்டில் இருந்து 2.98 ரிங்கிட்டாக உயர்ந்து காண்கிறது.
தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை, ஜூன் 10ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, லிட்டருக்கு 3.35 ரிங்கிட் குறைவாகவே உள்ளது.
ரோன் 95 பெட்ரோலின் விலை 2.05 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சபா, சரவா, லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am