
செய்திகள் மலேசியா
பத்துமலை மேல்குகைக்கு செல்வதற்கான மின் படிக்கட்டு கட்டுமானம் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் மின் படிக்கட்டு கட்டுமானம் வரும் ஜனவரி 25ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கவுள்ளது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
பத்துமலை மேல்குகைக்கு செல்வதற்கு மின் படிக்கட்டு கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அண்மையில் பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
அவரிடம் இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து முழுமையாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான மாநில அரசின் ஒப்புதல் கடிதத்தை வரும் 2025 ஜனவரி 19ஆம் தேதி வழங்குவதாக அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இவ்வேளையில் மாநில அரசுக்கும் மந்திரி புசாருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் அடிப்படையில் மின் படிக்கட்டு கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி என் தலைமையில் நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டு தைப்பூச விழாவிற்கு முன் இந்த மின் படிக்கட்டு திட்டத்தை பூர்த்தி செய்ய தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது.
முருகப்பெருமானுக்கு நடைபெற்ற பன்னீர் அபிஷேக விழாவிற்கு பின் செய்தியாளர்கள் பேசிய டான்ஸ்ரீ நடராஜா இதனை கூறினார்.
10 மலையில் அமைந்துள்ள 140 அடி முருகன் சிலைக்கு ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்று பன்னீர் அபிஷேக விழா நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு இது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை எட்டுகிறது.
ஆகையால் இந்த பன்னீர் அபிஷேக விழாவை இன்னும் விமர்சையாக கொண்டாட தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2025, 10:05 pm
நாட்டில் அக்டோபர் நிலவரப்படி 3,141 உணவகங்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தை தொடர்கின்றன: ஃபுசியா
October 8, 2025, 10:04 pm
சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஏபி சிவம் வரவேற்பு
October 8, 2025, 9:27 pm
2026 பட்ஜெட்; வரும் ஆண்டிற்கான நாட்டின் திசையாக அமையும்: பிரதமர்
October 8, 2025, 9:24 pm
பெர்னாஸின் சூரியன் திட்டம்; இந்திய வர்த்தகர்களுக்காக அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்: ஹேமலா
October 8, 2025, 6:37 pm
லெவி உயர்த்தப்பட்டால் உணவகத் தொழில் பாதிக்கும்; 15,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை: டத்தோ ஜவஹர் அலி
October 8, 2025, 3:28 pm