செய்திகள் மலேசியா
நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் பாப்பாகோமோ கைது
கோலாலம்பூர்:
நிதி திரட்டும் மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பாபாகோமோ எனும் வலைப் பதிவாளர் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸை போலிசார் இன்று கைது செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் புக்கிட் அமான் பணமோசடி குற்றப் புலனாய்வுக் குழுவின் அம்லா உறுப்பினர்கள் குழுவால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
41 வயதான வான் முஹம்மது அஸ்ரி ஒரு நிறுவனத்தின் பெயரைக் பயன்படுத்தி நிதி சேகரித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜுலை மாதம் அமைச்சர் ஒருவர் செய்த போலிஸ் புகாரை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முன்னதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைனை தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
