செய்திகள் மலேசியா
2018 -ஆம் ஆண்டு முதல் போத்தா(POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்களாவர்: சைஃபுடின்
கோலாலம்பூர்:
தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 18 வயதுக்கும் மேற்பட்ட 13 பேரில் நான்கு பேர் வெளிநாட்டினராவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
மேலும், 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்கள் தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போத்தா(POTA) சட்டம் 2015 இன் கீழ் நடைமுறைகள் தீவிரவாத தடுப்பு வாரியத்தால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மூன்று பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
2019 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இரண்டு பேர் வெளிநாட்டவர்கள்.
மேலும், 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணும், 2022 ஆம் ஆண்டில் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சைஃபுடின் மேலும் கூறினார்.
ஜனவரி 2018 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை போத்தாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கையையும் குறித்து அமைச்சகத்திடம் கேட்ட சோ யூ ஹுய் (PH -RAUB ) கேள்விக்குப் பதிலளிக்கும் போது சைஃபுடின் இவ்வாறு கூறினார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 10:45 am
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா
March 23, 2026, 10:43 am
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம்
March 23, 2026, 10:42 am
கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி
March 23, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
March 23, 2026, 10:22 am
புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்
March 23, 2026, 10:09 am
ஓர் ஆண்டாக நீளும் சாலை பிரச்சினை: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
March 22, 2026, 6:41 pm
பூடி 95 பெட்ரோல்; மடானி அரசாங்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
March 22, 2026, 6:40 pm
மலாய், இந்தியர்கள் இடையிலான சமாதான கூட்டம்; மஇகாவுக்கு அழைப்பில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 22, 2026, 6:39 pm
