
செய்திகள் மலேசியா
2018 -ஆம் ஆண்டு முதல் போத்தா(POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்களாவர்: சைஃபுடின்
கோலாலம்பூர்:
தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 18 வயதுக்கும் மேற்பட்ட 13 பேரில் நான்கு பேர் வெளிநாட்டினராவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
மேலும், 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்கள் தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போத்தா(POTA) சட்டம் 2015 இன் கீழ் நடைமுறைகள் தீவிரவாத தடுப்பு வாரியத்தால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மூன்று பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
2019 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இரண்டு பேர் வெளிநாட்டவர்கள்.
மேலும், 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணும், 2022 ஆம் ஆண்டில் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சைஃபுடின் மேலும் கூறினார்.
ஜனவரி 2018 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை போத்தாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கையையும் குறித்து அமைச்சகத்திடம் கேட்ட சோ யூ ஹுய் (PH -RAUB ) கேள்விக்குப் பதிலளிக்கும் போது சைஃபுடின் இவ்வாறு கூறினார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm