
செய்திகள் மலேசியா
2018 -ஆம் ஆண்டு முதல் போத்தா(POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்களாவர்: சைஃபுடின்
கோலாலம்பூர்:
தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 18 வயதுக்கும் மேற்பட்ட 13 பேரில் நான்கு பேர் வெளிநாட்டினராவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
மேலும், 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்கள் தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போத்தா(POTA) சட்டம் 2015 இன் கீழ் நடைமுறைகள் தீவிரவாத தடுப்பு வாரியத்தால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மூன்று பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
2019 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இரண்டு பேர் வெளிநாட்டவர்கள்.
மேலும், 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணும், 2022 ஆம் ஆண்டில் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சைஃபுடின் மேலும் கூறினார்.
ஜனவரி 2018 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை போத்தாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கையையும் குறித்து அமைச்சகத்திடம் கேட்ட சோ யூ ஹுய் (PH -RAUB ) கேள்விக்குப் பதிலளிக்கும் போது சைஃபுடின் இவ்வாறு கூறினார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm
சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
September 17, 2025, 1:23 pm
கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்
September 17, 2025, 1:22 pm