
செய்திகள் இந்தியா
முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு: விவரம் கேட்டது உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
முஸ்லிம்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சைகுரிய வகையில் பேசியது குறித்து உச்சநீதிமன்றம் விவரம் கேட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி சேகர்குமார் யாதவ், நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும்.
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது என்றார்.
அவரது பேச்சு அரசமைப்புச் சட்டம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்று எம்.பி.க்கள், வழக்குரைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குழு அமைத்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரபல மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, நீதிபதி சேகர் குமாரின் பேச்சு தொடர்பான விவரங்களை அலாகாபாத் உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm