
செய்திகள் இந்தியா
முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு: விவரம் கேட்டது உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
முஸ்லிம்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சைகுரிய வகையில் பேசியது குறித்து உச்சநீதிமன்றம் விவரம் கேட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி சேகர்குமார் யாதவ், நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும்.
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது என்றார்.
அவரது பேச்சு அரசமைப்புச் சட்டம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்று எம்.பி.க்கள், வழக்குரைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குழு அமைத்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரபல மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, நீதிபதி சேகர் குமாரின் பேச்சு தொடர்பான விவரங்களை அலாகாபாத் உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm