செய்திகள் உலகம்
ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு ஹாங்காங்கில் தீவிர மருத்துவப் பரிசோதனை
ஹாங்காங்:
ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்குத் தீவிர சுகாதாரப் பரிசோதனையை ஹாங்காங் சுகாதார அதிகாரிகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நோயொன்று காங்கோ குடியரசில் 79 பேரின் உயிரைப் பறித்ததுள்ளதாக ஐ நா சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனத்திடம் தகவல் கேட்டதாக ஹாங்காங் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் சொன்னது.
அக்டோபர் மாதத்திலிருந்து அந்த மர்ம நோய் காரணமாக 79 பேர் மாண்டதாகவும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த சோகை (anaemia) முதலிய அறிகுறிகள் தென்பட்டன.
தங்கள் நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு மர்ம நோய் இருப்பதைப் பற்றித் தகவல் இல்லை என்று ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்தது.
காங்கோவிலிருந்து ஹாங்காங் செல்ல நேரடி விமானங்கள் இல்லையென்றாலும் ஆப்பிரிக்க நகரங்களின் வழியாக விமானங்கள் வருகின்றன.
அவற்றில் மருத்துவப் பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
January 16, 2025, 8:48 pm
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
January 15, 2025, 4:10 pm
வியாட்நாம் அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது
January 15, 2025, 1:10 pm
போலி ஜம்ஜம் நீர் விற்பனை: $2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நபர் கைது
January 15, 2025, 11:32 am
சந்தையில் புட்டு விற்பனை செய்யும் டிரம்ப் போல இருக்கும் நபர்: பாகிஸ்தானில் அதிசயம்
January 15, 2025, 10:58 am
தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் கைது: ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை
January 15, 2025, 10:56 am