செய்திகள் உலகம்
இந்தோனேசியா நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு: 10 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால், மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால், 170-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 172 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள், 539 ஹெக்டேர் நெல் வயல்களை மோசமாக பாதிப்படைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், ஏறக்குறைய 1,000 மக்களை வெளியேற்றுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கட்டிடம் முழுமையாக சேதம்
March 3, 2026, 11:18 am
ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்கிறது ஐக்கிய அரபு அமீரகம்
March 2, 2026, 10:26 pm
