செய்திகள் மலேசியா
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் காஃபி குடிப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் வெறும் காஃபி குடிப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.
அனைத்து கட்சிகளின் குரல்களுக்கும் செவிசாய்க்கப்பட வேண்டும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
கடந்த மாநில தேர்தலின் போது தொகுதி பங்கீட்டுற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இப் பேச்சுவார்த்தையின் போது மஇகா பல தொகுதிகளை கோரியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை.
இது மஇகா மட்டும் அல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஏமாற்றம் தான்.
என்னைப் பொறுத்தவரை காஃபி குடிப்பதற்காகவே இந்த தொகுதி பங்கீட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டது என நான் உணர்ந்தேன்.
இந்நிலை நீடிக்கக் கூடாது. குறிப்பாக இதன் காரணமாக கொண்டு நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது.
அப்படியொரு பிளவை ஏற்படுத்துபவர்களின் எண்ணமும் நிறைவேறக் கூடாது.
தேசிய முன்னணியின் 50ஆவது பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
கடந்த காலங்களில் கட்சியின் தொகுதித் தலைவராக இருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஆனால் இப்போதைய நடைமுறையில் அப்படி ஒரு வாய்ப்பு இறுதி வரை கிடைக்காது.
அதே வேளையில் உறுப்பு கட்சிகளுக்கே தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் தோழமைக் கட்சிகள் தேர்தலுக்கு போஸ்டர் மட்டுமே ஒட்ட முடியும்.
ஆகையால், இதுபோன்ற விவகாரங்களை தேசிய முன்னணி தலைமைத்துவம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 10:53 pm
பெர்லிஸ் மந்திரி புசாராக அபு பக்கர் பதவியேற்றார்
December 28, 2025, 1:48 pm
சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமம் வழங்கியது
December 28, 2025, 12:51 pm
ஜோ லோ சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் வரை 1 எம்டிபி ஊழல் வழக்கு முடிவடையாது
December 28, 2025, 12:20 pm
பல்கலைக்கழக மாணவர்களே சமுதாயத்தின் நாளைய நம்பிக்கை தலைவர்கள்: டத்தோ சிவக்குமார் பாராட்டு
December 28, 2025, 11:52 am
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது தளபதி திருவிழா: விஜய்யை காண 75,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்
December 27, 2025, 3:19 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் சந்திப்பார்: குணராஜ்
December 27, 2025, 11:25 am
1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி
December 27, 2025, 10:09 am
