நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்

ரவாங்:

உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் மக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

எஸ்ஜிடிஏ டிசைன் அண்ட் ஆர்ட் ஸ்டூடியோ ரவாங் அங்கூன் சிட்டியில் திறப்பு விழா கண்டனது.

ஓவியக் கலைஞர் சங்கீதா இதன் உரிமையாளராக உள்ளார்.
அவரின் படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்படுகிறது.

குறிப்பாக இவர் சுவரோவியம் அல்லது சுவர்ச்சித்திரம் வரைவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஆவார்.

அதே வேளையில் நமது பாரம்பரிய குறிப்பாக அரிய பழைய பொருட்களை புதுமைப்படுத்தி விற்பனைக்கு வைத்துள்ளார்.

மேலும் ஓயியத் துறையை அடுத்த நிலைக்கும் அவர் கொண்டு சென்றுள்ளார்.

சங்கீதா போன்ற உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் முழு  ஆதரவு தர வேண்டும்.

இதன் மூலம் அவர்களின் சிறந்த படைப்புகளும் வெளியே வரும் என்று அம்மையத்தை திறந்து வைத்து பேசிய டத்தோ சிவக்குமார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset