செய்திகள் உலகம்
இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொழும்பு:
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வௌியிட்ட அறிவிப்பில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
இது கிழக்கு மாகாணத்தை பாதித்துள்ளது. கனமழை, கடும் காற்று காரணமாக கொழும்பு செல்லும் ஆறு விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
வியாழன் காலை 8 மணி நிலவரப்படி கனமழை வௌ்ளத்தால் 91 மாவட்டங்களில் உள்ள 98,000 குடும்பங்களை சேர்ந்த 330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
25,000- க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:54 pm
மடகாஸ்கரில் அரசியல் மாற்றம்: பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் அதிரடியாக நீக்கம்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 4:02 pm
“வான்வெளி பாதுகாப்பில் தளர்ச்சி இல்லை”: ஈரானிடம் துருக்கி கடும் எச்சரிக்கை
March 10, 2026, 3:29 pm
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
March 10, 2026, 3:14 pm
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
March 10, 2026, 6:17 am
