
செய்திகள் உலகம்
இந்தோனேசிய நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு
ஜகார்தா:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. அந்தச் சம்பவத்தில் வாகனங்கள் புதையுண்டதாக மீட்புப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட சுமத்ராவின் 4 மாவட்டங்களில் கடந்த வார இறுதியில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன.
அண்மை நிலவரப்படி டெலி செர்டாங் (Deli Serdang) என்ற மாவட்டத்தில் மழையை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மாண்டவர்களில் சிலர் பயணிகள் பேருந்திலிருந்து மீட்கப்பட்டனர். பேருந்து அந்த வழியாகச் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டு அது மண்ணில் புதையுண்டதாகக் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளுக்குக் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காயமுற்றனர்.
மழைக்காலத்தில் இந்தோனேசியாவில் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக நவம்பர் மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு.
ஆனால் மோசமான ஆபத்துகளைக் கொண்டுவரும் சில பேரிடர்கள் வேறு சில காலக்கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 9:56 am
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm