செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்
ஷா ஆலம்:
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சிறார் சித்திரவதை தொடர்பில் 387 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறார்களில் 139 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்களாகவும் 96 பேர் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலானவர்களாகவும் எஞ்சியோர் 18 வயதுக்கும்
கீழ்ப்பட்டவர்களாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறார் பராமரிப்பு மைய நடத்துநர்களே இத்தகைய குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சொந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ப்பு பெற்றோர் உள்ளனர் என்றார்.
சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிறார் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாவது சிறார் நேர்காணல் மையத்தை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரும்பாலான சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள், குழந்தைகள் அல்லது சிறார்களைத் தனியாக விடுவது போன்ற அக்கறையின்மைச் செயல்களால் ஏற்படுகின்றன என்று அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 3:55 pm
தெமர்லோ தொகுதி யாருக்கு? அமானா - பிகேஆர் இடையே வெடிக்கும் மோதல்
April 15, 2026, 3:53 pm
மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
April 15, 2026, 3:28 pm
குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய 119 வெளிநாட்டவர்கள் கைது
April 15, 2026, 3:21 pm
கண்டெடுத்த கைத்துப்பாக்கியை ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்த நபருக்குச் சிறை தண்டனை
April 15, 2026, 3:21 pm
ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
