
செய்திகள் கலைகள்
ஷாருக்கானுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது
புது டெல்லி:
நடிகர் ஷாரூக் கானிடம் ரூ. 50 லட்சம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த வழக்குரைஞரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை மிரட்டல் தொலைபேசி வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் கடந்த 5ஆம் தேதி பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் ஃபைசன்னின் தொலைபேசியில் இருந்து கொலை மிரட்டல் வந்தது தெரிய வந்தது.
ஆனால் ஃபைசன் கானின் செல்போன் தொலைந்து போய்விட்டதாகவும் இது தொடர்பாக ராய்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியது பொய் என்பதும் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதும் அவர்தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஃபைசன் கானை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am