செய்திகள் மலேசியா
லங்காவி சுற்றுலா பயணிகளுக்கு இனி பரிசோதனை தேவை இல்லை: சுகாதார அமைச்சு
லங்காவி:
லங்காவி தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை என்றும், அது இனி கட்டாயம் அல்ல என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லங்காவி தீவு சுற்றுலா பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில் பயணங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது என அமைச்சர் கைரி அறிவுறுத்தினார்.

லங்காவி வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களில் 54,341 பேரில் சுமார் 0.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட பயணங்களுக்கு முன்பு தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை," என்றார் அமைச்சர் கைரி.
தற்போதைய சூழலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்காக மலேசிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
