செய்திகள் மலேசியா
லங்காவி சுற்றுலா பயணிகளுக்கு இனி பரிசோதனை தேவை இல்லை: சுகாதார அமைச்சு
லங்காவி:
லங்காவி தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை என்றும், அது இனி கட்டாயம் அல்ல என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லங்காவி தீவு சுற்றுலா பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில் பயணங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது என அமைச்சர் கைரி அறிவுறுத்தினார்.

லங்காவி வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களில் 54,341 பேரில் சுமார் 0.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட பயணங்களுக்கு முன்பு தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை," என்றார் அமைச்சர் கைரி.
தற்போதைய சூழலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்காக மலேசிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சி
September 14, 2026, 9:32 pm
ஆலய விவகாரங்களில் எழும் மிரட்டல், அழுத்தங்களுக்கு பேரா மாநில அரசு ஒருபோதும் அடிபணியாது: டத்தோ சிவநேசன்
September 14, 2026, 9:32 pm
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா: அடுத்தாண்டு நடைபெறும்
September 14, 2026, 9:31 pm
ஹஜ் செலவைக் குறைக்க முயன்றேன்: ஜமீல் கிர்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
