
செய்திகள் மலேசியா
லங்காவி சுற்றுலா பயணிகளுக்கு இனி பரிசோதனை தேவை இல்லை: சுகாதார அமைச்சு
லங்காவி:
லங்காவி தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை என்றும், அது இனி கட்டாயம் அல்ல என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, லங்காவி தீவு சுற்றுலா பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில் பயணங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது என அமைச்சர் கைரி அறிவுறுத்தினார்.
லங்காவி வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களில் 54,341 பேரில் சுமார் 0.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட பயணங்களுக்கு முன்பு தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை," என்றார் அமைச்சர் கைரி.
தற்போதைய சூழலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்காக மலேசிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 10:16 pm
இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்
October 19, 2025, 9:07 pm
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm