நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை: இந்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் 

புதுடெல்லி:

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.

மருத்துவ பரிசோதனை அறிக்கையை, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்தது. இந்நிலையில், 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு இத் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையை இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கும் அனுப்பிவைத்ததாக பாரத் பயோடெக் நிறுவனம் சொல்லிக் கொண்டது 

அவற்றைத் தொடர்ந்து இந்த மருந்துக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படி ஒப்புதல் ஏதும் இன்னும் வழங்கப்படவில்லை என சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் விளக்கம் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset