செய்திகள் மலேசியா
நாட்டில் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கணடறியப்பட்டுள்ளன: நட்மா
கோலாலம்பூர்:
வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவின் இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரிஸ் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியாவில் 3,605 இடங்களும் சபாவில் 799 இடங்களும் சரவாக்கில் 201 இடங்களும் லாபுவானில் 14 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறைக்குக் குறையாமல் வெள்ளத்தை சந்தித்த பகுதிகளின் அடிப்படையில் இந்த வெள்ள இடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள 254 சரிவான நிலப் பகுதிகளையும் நட்மா கண்காணித்து வருகிறது.
இதில் 86 உயர் சிக்கலான, 84 நடுத்தர முக்கியமான மற்றும் 84 குறைந்த அபாயத்தை கொண்ட இடங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
