செய்திகள் மலேசியா
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாவிற்கு மனநிறைவு அளிக்கிறது: டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர்
கோத்தா கினாபாலு:
தங்களை சூலு சுல்தானின் வாரிசுதாரர்கள் என்று கூறி கொள்ளும் தரப்பினர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை பிரான்ஸ் நீதிமன்றம் முழுவதுமாக நிராகரித்தது வரவேற்கத்தக்கது என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார்.
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபா மாநிலத்திற்கு மனநிறைவை அளித்திருப்பதாக அவர் சொன்னார்.
சபா மாநிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. காரணம், சபா மாநிலம் மலேசியாவின் கூட்டமையில் இருக்கிறது. ஓர் இறையாண்மை கொண்ட மாநிலமாக சபா விளங்குகிறது என்று அவர் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக சொன்னார்.
சபா மாநிலம் தொடர்பான சட்ட விவகாரங்களில் மலேசியாவிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் சட்டம், கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான், ஒற்றுமை அரசாங்கம் அனைவருக்கும் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் நன்றி தெரிவித்து கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:40 am
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
January 25, 2026, 9:39 am
தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 1:53 pm
மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையை நிறுத்துங்கள்: பிரதமர்
January 24, 2026, 12:53 pm
