செய்திகள் இந்தியா
சொத்தில் நாய்க்கும் பங்கு: உயில் எழுதி வைத்த ரத்தன் டாடாவின் நெகிழ்ச்சி செயல்
மும்பை:
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா எழுதிய உயிலில், சமையல்காரர், உதவியாளருக்கு சொத்து வழங்கியது மட்டுமின்றி, வளர்ப்பு நாயை பராமரிக்கவும் சொத்து எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.
உயிலில் தனது வளர்ப்பு நாய்க்கு ரத்தன் டாடா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ரத்தன் டாடா ஆசையாக வளர்த்து வந்தார். இறப்பு வரைக்கும் தன்னுடன் இருந்த அந்த டிட்டோவுக்கும் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது டிட்டோ நாயை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.
தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
