செய்திகள் மலேசியா
வசதிக் குறைந்த 100 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சுபாங் தொகுதி மஇகாவினர் வழங்கினர்
சுபாங்:
வசதிக் குறைந்த 100 பேருக்கு சுபாங் தொகுதி மஇகாவினர் தீபாவளி அன்பளிப்புகள் இன்று வழங்கினர்.
நாட்டில் வாழும் இந்து மக்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பெருநாளை கொண்டாடவுள்ளனர்.
இப்பெருநாளை பி40 உட்பட வசதிக் குறைந்த மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என மஇகாவினர் ஆங்காங்கே உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் சுபாங் தொகுதி மஇகாவின் ஏற்பாட்டில் 100 பேருக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
சுபாங் தொகுதி மஇகா தலைவர் தே. ஜெகதீஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஏபி சிவம், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார், மாநில தலைமை செயலாளர் எம். சசிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2024, 8:39 pm
கோம்பாக் தொகுதி மஇகாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் 200 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது: கோபி
October 20, 2024, 12:05 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது: நூருல் இசா அன்வார் பாராட்டு
October 20, 2024, 12:02 pm
காஜாங்கில் தீபாவளி சந்தை 2024: அக்டோபர் 18 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
October 20, 2024, 10:31 am
தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகை பிடித்த விவகாரம்: மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்கள் விதிப்பு
October 20, 2024, 10:29 am
இந்தோனேசிய அதிபரான ப்ராபோவோ சுபியண்டோவைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
October 20, 2024, 10:09 am
கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
October 20, 2024, 9:04 am