நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதிக் குறைந்த 100 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சுபாங் தொகுதி மஇகாவினர் வழங்கினர்

சுபாங்:

வசதிக் குறைந்த 100 பேருக்கு  சுபாங் தொகுதி மஇகாவினர் தீபாவளி அன்பளிப்புகள் இன்று வழங்கினர்.

நாட்டில் வாழும் இந்து மக்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

இப்பெருநாளை பி40 உட்பட வசதிக் குறைந்த மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என மஇகாவினர் ஆங்காங்கே உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் சுபாங் தொகுதி மஇகாவின் ஏற்பாட்டில் 100 பேருக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

சுபாங் தொகுதி மஇகா தலைவர் தே. ஜெகதீஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஏபி சிவம், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார், மாநில தலைமை செயலாளர் எம். சசிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset