நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோம்பாக் தொகுதி மஇகாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் 200 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது: கோபி

கோம்பாக்:

கோம்பாக் தொகுதி மஇகாவின் ஏற்பாட்டிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் 200 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

அத்தொகுதியின் தலைவர் கோபி இதனை கூறினார்.

தீபாவளி பெருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகளை கோம்பாக் தொகுதி மஇகா மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டும் கிட்டத்தட்ட 200 பேருக்கு உதவிப் பொருட்களுடன் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.

வசதிக் குறைந்த மக்களும் இத்தீபத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எங்களின் முக்கிய நோக்கமாகும்.

வரும் காலங்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்று கோபி கூறினார்.

முன்னதாக கோம்பாக் தேசிய முன்னணி தலைவர் டத்தோ வீரா மெகாட் ஜூல்கர்னைய்ன் இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார்.

சிலாங்கூர் மாநில மஇகா தலைமை செயலாளர் எம். சசிதரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset