செய்திகள் மலேசியா
அபுயாவின் மகன் குளோபல் இக்வான் உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை போலிஸ் விசாரிக்கும்: ஐஜிபி ரஸாருடின்
கோலாலம்பூர்:
அபுயாவின் மகன் குளோபல் இக்வான் உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை போலிஸ் விசாரிக்கும்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
குளோபல் இக்வான் உறுப்பினர்களால் அடக்குமுறைக்கு ஆளானதாகவும், அடைக்கப்பட்டதாகவும் கூறப்படும் முன்னாள் தலைவர் அல்-அர்காம் அஷாரி முஹம்மதுவின் மகள் உம்மு அத்தியாவின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
41 வயது பெண்மணி ஒருமுறை அறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக, செப்டம்பர் 24ஆம் தேதி கோலா சுங்கை பாரு காவல் நிலையத்தில், மேலாகாவில் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்தனர்.
ஜோர்டானில் தனது கல்வியைத் தொடரும் போது, அங்கு தனது குடும்பத் தொழிலை நிர்வகித்து வரும் நிலையில்,
தனது நான்காவது மனைவியாக குளோபல் இக்வான் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் போலிசார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2024, 10:31 am
தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகை பிடித்த விவகாரம்: மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்கள் விதிப்பு
October 20, 2024, 10:29 am
இந்தோனேசிய அதிபரான ப்ராபோவோ சுபியண்டோவைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
October 20, 2024, 10:09 am
கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
October 20, 2024, 9:04 am
மடானி அரசாங்கத்தின் பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 20, 2024, 8:03 am
இந்தோனேசிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜகார்த்தா சென்றடைந்தார்
October 19, 2024, 6:48 pm
போர்ட் கிள்ளான் இந்திய முஸ்லிம் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
October 19, 2024, 3:54 pm