நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு

சென்னை: 

சென்னையிலிருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் 180 பயணிகளுடன் புறப்பட தயாரானது.

அப்போது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்த விமாணி இது குறித்து விமான நிலைய கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த பொறியாளர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபப்ட்டனர்.நீண்ட நேரமாகியும் பழுது சரி செய்யப்படாததால் வியான பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இயந்திரக் கோளாறு சரி செய்யபட்டதை தொடர்ந்து விமான நேற்று பிற்பகலில் புறபப்ட்டது.இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset