நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும்  உத்தரவிட்டது அல்ல: நஜீப்

கோலாலம்பூர்: 

மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவ் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் இதனை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

நான்  அல்தான்துயாவை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவரை சந்தித்ததில்லை.

அவரைக் கொலை செய்யவும் உத்தரவிடவில்லை.

ஷாஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ நஜீப் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ்  எழுதிய மை ஸ்டோரி ஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ் புத்தகத்தின் 42ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளபடி,

அல்தான்துயாவை நஜீப்புக்கு தெரியுமா அல்லது அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்று ஷாபி கேட்டார்.

எனக்கு அவரைத் தெரியாது, அவரைச் சந்தித்ததில்லை என்று நஜீப் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset