நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி

ஜொகூர்பாரு: 

விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம் என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி வலியுறுத்தினார்.

ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் வார விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டது.

இந்த விடுமுறை அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கான உத்தரவை மாநிலத்தின் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் அறிவித்தார்.

சுல்தானின் உத்தரவை மாநில அரசு  மதிக்கிறது.

எடுத்த ஒவ்வொரு முடிவும் மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த ஜொகூர் மக்களுக்கு சிறந்ததாக அமையும்.

ஆகையால் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset