செய்திகள் மலேசியா
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
புத்ராஜெயா:
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி இதனை கூறினார்.
கல்வி எல்லாருக்குமான அழியா சொத்தாகும். இது அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
அதன் அடிப்படையில் தான் ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்கும் உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் உயர் கல்விக் கூடங்களில் கல்வியை தொடங்கவிருக்கும் 200 மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
கல்வி கட்டணம் உட்பட கற்றல் கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டது.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் ஆலோசனையின் பேரில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
வரும் காலங்களில் இந்த உதவிகள் தொடரும் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.
இதனிடையே உதவிகள் பெற்ற மாணவர்கள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டிற்கும் அர்விந்த் அப்பளசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:03 pm
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
October 11, 2024, 3:57 pm
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
October 11, 2024, 3:55 pm
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
October 11, 2024, 3:47 pm
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm
ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே
October 11, 2024, 11:05 am