நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே

ஜொகூர்பாரு:

ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், அவர்கள் வேறு மாநிலத்திற்கு மாறி செல்லலாம்.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக இடைக்கால சுல்தான் இஸ்மாயில் அறிவித்தனர்.

இந்த  வார இறுதி விடுமுறையை ஏற்காத தரப்பினர் தாராளமாக வேறு மாநிலங்களுக்குச் செல்லலாம்.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியுடன் ஜொகூர் மாநில இஸ்லாமிய சமய வாரியம், மாநில அரசு, அரசு நிறுவனங்கள், மக்களின் கருத்துக்களுடன், ஜொகூர் மாநிலத்திற்கு மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளேன்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால் மகிழ்ச்சியடையாத அல்லது அதிருப்தி அடையாத கட்சிகள் இருந்தால், மக்களுக்கு அல்லது அரசியல் நலன்களை கேள்வி கேட்க விரும்பினால், வெள்ளி,  சனி விடுமுறைகள் உள்ள மாநிலங்களுக்குச் செல்ல உங்களை வரவேற்கிறோம், என்று அவர்  தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset