செய்திகள் மலேசியா
தீபாவளிக் கடைகளை கலை நிகழ்ச்சிக்காக அகற்றச் சொல்வதா?: பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் கொதிப்பு
கோலாலம்பூர்:
தீபாவளிக் கடைகளை கலை நிகழ்ச்சிக்காக அகற்றச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்திய சிறுதொழில் வணிகர்கள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் 22 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் நீர் தேக்கம் எதிர்புறத்தில் அந்த 22 கடைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், இதர பொருட்களும் இப்போது அடுக்கி வருகிறார்கள்.
ஆனால், திடீரென்று 8 கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தீபாவளிக்காக கலைவிழா நடத்த மேடை அமைக்கப்படுவதால் இந்த எட்டு கடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடைகளை அமைத்த பின்னர் அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று இப்போது உத்தரவு பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம் என்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் குணசீலன் கேள்வி எழுப்பினார்.
பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியில் எங்களுக்கு கடைகள் கிடைத்துள்ளது.
ஆனால் மேடையை காரணம் காட்டி 8 கடைகளை அகற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தீபாவளி கலைவிழா நடத்த வேறு பல இடங்கள் உள்ளன. எதாவது ஓர் இடத்தில் அவர்கள் மேடையை அமைத்து கொள்ளலாம்.
எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று சிறு வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 9:36 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
