நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம் ராணுவ அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம் ராணுவ அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

சுங்கைபீசி தற்காப்புப் படை முகாமில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள நாயகி அம்மனில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டேன்.

ஆலயத் தலைவத் லெப்டினன்ட் கர்னல் ராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்து கொண்டேன்.

ஆன்மீக எழுச்சியூட்டும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட விழாவை ஏற்பாடு செய்வதில் முன்மாதிரியான அர்ப்பணிப்பையும், முயற்சிகளையும் வெளிப்படுத்திய எனதுமனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த ஆலயம் ராணுவ அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு பாதுக்காத்து வருவது பாராட்டுக்குரியது.

மேலும் இதுபோன்ற சமய விழாக்களுக்கு அனுமதி வழங்கிய அரசுக்கும் எனது நன்றி என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மஹிமா உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset